நவம்பர் 7 சென்னையில் சிபிஎம் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற பி.ராமமூர்த்தி சிலை - எம்.ஆர்.வெங்கட்ராமன் அரங்க திறப்பு விழாவில் ஆற்றிய உரைகளிலிருந்து...
பழனி திருக்கோவில் நிலத்தை தனியாருக்கு தாரைவார்க்க மாற்றுத்திறனாளிகள் அமைப்பு சதி செய்வதாக கூறியுள்ள இந்து முன்னணி மாநில தலைவருக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி, மாநிலப் பொதுச்செயலாளர் தோ.வில்சன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
த ிண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இவ்வாறு வருகை தரும் பக்தர்களில் சிலர் தங்கள் இல்லங்களில் உள்ள மனநிலை பாதிக்கப்பட்ட மாற்றுத்திற னாளிகளை பழனி கோவிலுக்கு சாமி கும்பிட அழைத்து வந்து பழனியிலேயே விட்டுச் செல்கின்றனர்.
மாற்றுத்திற னாளிகள் உணவுக்காக அங்கும் இங்கும் அலைந்து திரிவதும், அரைகுறை ஆடையுட னும், சிலர் அச்சுறுத்தும் ஆயுதங்களுடனும் சாலைகளில் செல்வது தொடர்கதையாக உள்ளது. மேலும், மனநிலை பாதிக்கப்பட்ட பெண் மாற்றுத்திறனாளிகளை இங்குள்ள சில கயவர்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கியதும், இதனால் கருவுற்று குழந்தை பெற்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
தயார்நிலையில் மனநலக்காப்பகம்
இவ்வாறு பழனி கோவிலுக்காகவே அழைத்து வரப்பட்டு அனாதையாக, ஆதர வற்றவராக விடப்பட்டுள்ள மனநலம் பாதிக் கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை பாது காப்பதற்கு இந்து சமய அறநிலையத் துறை யின் சார்பில் ஒரு மனநல காப்பகம் அமை க்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மாற்றுத்திற னாளிகள் சங்கம் சார்பில் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு முதல் போராட்டம் நடத்தி வருகிறோம். இப்போராட்டங்களின் விளை வாக தற்போது பழனி கோவிலுக்கு சொந்தமான ஒர் இடத்தை தேர்வு செய்து மனநல காப்பகம் துவங்கிட, அதற்கான நிதியையும் ஒதுக்கி, பணிகளும் முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. பழனியை கலவர பூமியாக்கச் சதி
இந்நிலையில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காட்டேஸ்வரா சுப்ரமணியம் 5.11.2023 அன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், நூருல் ஹூதா (எ) பகத்சிங் என்பவர் இந்து பெயரில் செயல்படும் இஸ்லா மியர் என்றும், இவர் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் சார்பில் பலவிதப் போராட்டங் களை நடத்தி கோவில் நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்கவும், மனநல காப்பகமாக மாற்றவும் முயற்சித்து வருகிறார் எனவும், கோவில் நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்க அனுமதிக்க மாட்டோம் என்றும் குறிப்பிட்டு மாற்றுத்திறனாளிகள் மீதான வெறுப்பு அரசியலை விதைத்து, அரசியல் அறுவடை செய்ய, பழனியை கலவர பூமியாக மாற்ற திட்டமிட்டு சதி செய்யும் நோக்குடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மக்கள் நலத்திட்டங்கள் கண்களுக்குத் தெரியாதா?
பழனியில் சுற்றித் திரியும் மனநிலை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் அனை வரும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் மட்டு மல்ல; பலர் வெளியூர்களிலிருந்தும் விடப்பட்டுள்ளவர்கள் ஆவர். இந்து பக்தர்கள் விட்டுச் சென்றுள்ள மனநிலை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்காகவே மனநல காப்பகம் தேவை
அப்படி ஒரு மனநல காப்பகம் அமைத்தால் அது தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதாக கூற முடியுமா? இதே பழனி கோவிலின் சார்பாக பள்ளிகள், கல்லூரிகள், நாதஸ்வர பள்ளிகள், ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகம், மருத்துவமனை எனப் பல நல்ல மக்கள் நலத் திட்டங்களை தேவஸ்தான நிதியி லிருந்து செய்து வருவது உங்கள் கண்களுக்கு தெரியாதா? அது போன்றே தான் மாற்றுத்திற னாளிகளுக்கான மனநலக் காப்பகமும் முழுமையாக கோவில் கட்டுப்பாட்டில் தான் நடைபெற உள்ளது. காப்பகத்தில் பணிபுரியும் அனைவருமே தேவஸ்தான ஊழியர்கள்தான். காப்பகத்தில் பணிபுரியும் தேவஸ்தான ஊழி யர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்காக மட்டுமே தனியார் தொண்டு நிறுவன ஊழியர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள்.
முழுமையாக இந்த விபரங்களைத் தெரிந்து கொள்ளாமல், அரசு சார்பில் மாற்றுத் திறனாளிக்கான மனநலக் காப்பகம் அமைப்பதை இந்து முன்னணி தடுக்க முயற்சிப்பது நியாயம் தானா? ஆதரவற்ற- மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளிகளுக் காக மனநல காப்பகம் வேண்டுமென போராடு பவர்களை மதத்தின் பெயரால் அவதூறு செய்வது நியாயம் தானா? மேலும் பகத்சிங் என்கிற ஒரு நபர் மட்டும் இந்த இயக்கத்தில் பங்கேற்கவில்லை; இந்துக்களாக உள்ள பல நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகளே திரண்டு வந்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். வசதிகள் கிடைக்கப் போராடியது யார்?
பழனி கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்களான முதியவர்கள், மாற்றுத்திற னாளிகள் சிரமம் இல்லாமல் வந்து போவ தற்கான அனைத்து வசதிகளும் செய்து தரக் கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பகத்சிங் தலைமையில்தான் பல போராட்டங்கள் நடத்தி அவை நடை முறைப்படுத்தவும் செய்யப்பட்டுள்ளது. சாய்வு தளம், மின்தூக்கி, வீல் சேர் வசதி, பேட்டரி கார், தடையற்ற சூழல், பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் தங்கும் இடங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் வெஸ்டர்ன் கழிப்பறை வசதி உள்ளிட்டு அனைத்து வசதிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனால் பெரிதும் பயனடைந்துள்ள வர்கள் பெரும்பான்மையாக உள்ள இந்து மாற்றுத்திறனாளி மனநிலை பாதிக்கப்பட்டவர்களே ஆவர்.
மேற்குறிப்பிட்ட, ‘இந்து மாற்றுத்திற னாளிகளின்’ பிரச்சனைகளுக்காக ஏதேனும் ஒரு போராட்டமாவது ‘இந்து முன்னணி’ நடத்தி இருக்கிறதா? மாற்றுத் திறனாளிக்கான மனநல காப்பகம் என்ற துமே, இந்து வர்ணாசிரம தர்மத்தின் படி மாற்றுத்திறனாளிகள் மீது வெறுப்பைக் கொட்டவே, காப்பகத்தை தடுப்பதற்காக ஓடி வந்து, மதத்தின் பெயரால் குழப்பத்தை ஏற்படுத்தி, பழனி நகரத்தை கலவர பூமி ஆக்கி, அதில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் வர்ணாசிரம இழி புத்தி வெளிப்பட்டுள்ளது. இந்தப் பொய்யும் புரட்டும் கலந்த, இந்து முன்னணியின் தலைவர் வெளியிட்டுள்ள மாற்றுத்திறனாளி விரோத அறிக்கை வன்மை யான கண்டனத்திற்குரியது.